காணி நிலம் வேண்டும்

1909

காணி நிலம் வேண்டும்-பராசக்திகாணி நிலம் வேண்டும்;-அங்கு,தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய்-அந்தக்காணி நிலத்திடையே-ஓர் மாளிகைகட்டித் தரவேணும்;-அங்கு,கேணி யருகினிலே-தென்னைமரம்கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்பக்கத்திலே வேணும்;-நல்லமுத்துச் சுடர்போலே-நிலாவொளிமுன்புவர வேணும்?அங்குகத்துங் குயிலோசை-சற்றே வந்துகாதிற்பட வேணும்;-என்றன்சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொருபத்தினிப் பெண்வேணும்;-எங்கள்கூட்டுக் களியினிலே-கவிதைகள்கொண்டுதர வேணும்;-அந்தக்காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்காவலுற வேணும்;என்தன்பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்பாலித்திட வேணும்.

From Bharati's “தெய்வப்பாடல்கள்” (Divine Songs), via the Tamil Wikisource transcription.

Public domainThis poem is in the public domain. You may read it, copy it, recite it and publish it without asking anyone.